மேற்குவங்கத்தில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கையுடன் தெருக்களில் இறங்கினர். சிஐடியு தலைமையில் சித்தரஞ்சனில் இருந்து கொல்கத்தா வரை 283 கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற உள்ளது. தொழிலாளர் சட்டதிருத்தம் கைவிடுதல், குறைந்தபட்ச சம்பளம் அதிகரித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் மிகப்பெரிய இயக்கம் தொழிலாளர்களின் இந்த நெடும்பயணமாகும்.